05 February 2017

பூ சுமக்கும் புன்னகை


நகரின் சாலையோர சாயங்காலத்தில்
நடைபாதையில் அமர்ந்து
பூ கட்டி விற்றுக்கொண்டிருந்தாள்
சிறுமியொருத்தி
மொட்டுவெடிக்கத் தொடங்கும்
தன் கவலைகளை விரலிடுக்கில் அடுக்கி
சுருக்கிக்கொண்டிருந்தாள் பூ கட்டும் கயிறால்
உடைகளில் தெரியும் வறுமையை
யாருக்கும் தெரியாமல் விரட்ட முனைகிறாள்
விற்கும் பூ வாசத்தால்
தன்னைக்கடக்கும் கால்களை நிராகரித்து
நீளக்கூந்தல்களை கவனிக்கிறாள்
பூவற்ற தலைகளை திருப்ப
பூப் பூவென கூவுகிறாள்
கூடை நிறைந்த பூக்களை
யாராவது வாங்கிவிடுவார்கள்
என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறாள்
யாருமே விலைபேசிவிட முடியாத
தன் புன்னகையைச் சுமந்தபடி ...!!!

No comments:

Post a Comment