05 February 2017

வனாந்தரத்தின் திசை

அந்த வனாந்தரத்தின்
திசையெங்கும் வீசும் காற்றில்
பரவிக்கிடக்கிறது உன் வாசம்

மகரந்தப் பூக்களின் இதழ்களில்
ஒட்டியிருக்கும் சிவப்பு
உன் இதழ் பட்டு வந்தவைதாம்

உன் விரல்கள் தடவிப்போன 
மயக்கத்தில் ஊதா நிறப்பூவை 
உயிர்ப்பித்திருந்தது ஒரு கரும்பாறை

உன் முந்தானை பட்ட நொடியில்
பற்றி எரியத்தொடங்கியது
ஒரு பச்சை மரம்

மயிலொன்று நடந்து வருதென
ஓடி மறைந்தன
சில மான்குட்டிகள்

உன்னால் நிகழ்ந்த எல்லாவற்றையும் 
கண்டுபிடித்த போதுதான் உணர்ந்தேன்
நான் தொலைந்து போயிருந்ததை..!


No comments:

Post a Comment