அந்த வனாந்தரத்தின்
திசையெங்கும் வீசும் காற்றில்
பரவிக்கிடக்கிறது உன் வாசம்
மகரந்தப் பூக்களின் இதழ்களில்
ஒட்டியிருக்கும் சிவப்பு
உன் இதழ் பட்டு வந்தவைதாம்
உன் விரல்கள் தடவிப்போன
மயக்கத்தில் ஊதா நிறப்பூவை
உயிர்ப்பித்திருந்தது ஒரு கரும்பாறை
உன் முந்தானை பட்ட நொடியில்
பற்றி எரியத்தொடங்கியது
ஒரு பச்சை மரம்
மயிலொன்று நடந்து வருதென
ஓடி மறைந்தன
சில மான்குட்டிகள்
உன்னால் நிகழ்ந்த எல்லாவற்றையும்
கண்டுபிடித்த போதுதான் உணர்ந்தேன்
நான் தொலைந்து போயிருந்ததை..!
திசையெங்கும் வீசும் காற்றில்
பரவிக்கிடக்கிறது உன் வாசம்
மகரந்தப் பூக்களின் இதழ்களில்
ஒட்டியிருக்கும் சிவப்பு
உன் இதழ் பட்டு வந்தவைதாம்
உன் விரல்கள் தடவிப்போன
மயக்கத்தில் ஊதா நிறப்பூவை
உயிர்ப்பித்திருந்தது ஒரு கரும்பாறை
உன் முந்தானை பட்ட நொடியில்
பற்றி எரியத்தொடங்கியது
ஒரு பச்சை மரம்
மயிலொன்று நடந்து வருதென
ஓடி மறைந்தன
சில மான்குட்டிகள்
உன்னால் நிகழ்ந்த எல்லாவற்றையும்
கண்டுபிடித்த போதுதான் உணர்ந்தேன்
நான் தொலைந்து போயிருந்ததை..!
No comments:
Post a Comment