05 February 2017

கசியும் கலர் பொடிகள்

பனி பொழியும் இரவில் 
தெருவடைத்து  
பெண்கள் போடும் கோலங்களை 
இன்னும் அழகாக்குகிறது 
குழந்தைகளின் விரல்களிலிருந்து 
கசியும் கலர் பொடிகள்

எல்லா வாசல்களையும்
நடந்து கடந்து விமர்சிக்கும் 
பெண்களால் நிறைகிறது
அர்த்த ராத்திரி வீதி

தூரத்தில் கேட்கும் சிரிப்பொலியில்
சிலிர்த்து புரள்கிறது
வெட்கத்தில் ஒரு கோலம்
காதலை கலக்கி
யாரோ ஒருத்தி போட்ட
கலர் கோலத்திலிருந்து
உயிர்ப்பெற்று நடக்கத் தொடங்குகிறது
ஒரு மயில்


No comments:

Post a Comment