உன்னோடு
அதிக நேரம் செலவழித்த
அந்த தொடர்வண்டி நிலையத்தின்
நடைமேடை திண்ணையில் அமர நேர்ந்தது ஒருநாள்...
அன்று
கண்கள் மூடிய தருணம்
நினைவுகள் பின்னோக்கிச் சுழல..
''அப்போது என் விரல் கோர்த்தபடி
அருகில் அமர்ந்திருந்தாய் நீ
அழகான புன்னகையோடு ...
நீ பேசிய வார்த்தைகளை காதுகளும்
உன் அழகை கண்களும் உள்வாங்கிக்கொண்டிருக்க
அன்பான காதல் வெளிவந்து கொண்டிருந்த
ஆசிர்வதிக்கப்பட்ட நிமிடங்கள் அது .....!!!
இப்போது நீ இல்லாத அதே இடத்தில்
உன் நினைவுகளின் விரல் கோர்த்து அமர்ந்திருக்கிறேன்...
பெருங்கூச்சலிட்டு வந்த ஒரு தொடர்வண்டி
என் நினைவுகளைக் கலைத்து
பயணிகளை இறக்கி விட்டு
திரும்பாமல் போய் விட்டது உன்னைப்போல ....
தண்டவாளங்கள்
இன்னும் அப்பிடியே இருக்கின்றன
என்னைப்போல ....!!!