தொலைந்துபோன என் தூக்கங்களை தொகுத்து வைத்திருக்கிறேன் கவிதைகளாய்..! இந்த கடந்து போன நிமிடங்களில்...!
21 October 2016
05 October 2016
மின் இதழ்-பதிப்பு -5
வளர்ந்த , வளர்ந்து வரும் கவிஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாய் முகநூலில் #படைப்பு என்னும் குழுமம் மாதம்தோறும் சிறந்த கவிதைகளைத் தேர்வு செய்து அந்த கவிதைகளை சிறந்த முறையில் மின்னிதழாய் வெளியிடுகிறார்கள். இது எங்களைப் போன்றவர்களுக்கு ஒரு உந்துதலையும் இன்னும் நிறைய படைக்க வேண்டுமென்ற ஆர்வத்தையும் கொடுக்கிறது.
செப்டம்பர் மாதத்திற்கான
(மின் இதழ்-பதிப்பு -5) மின்னிதழில் எனது கவிதையையும் தேர்வு செய்திருக்கிறார்கள்.
அன்பின் நிழலெனவும்
பிரியங்களின் நிகழ்வெனவும்
சந்தோச நிமிடங்களில் மிதக்கிறது மனம்.
வாழ்வின் ஆகச்சிறந்த தருணங்களில் ஒன்றாய் இந்தநாளையும் இணைத்தமைக்கு நன்றிகள்.
என் கவிதையை தேர்வு செய்தவர்களுக்கு நன்றிகளும் மற்ற கவிதையாளர்களுக்கு வாழ்த்துக்களும் ...!
Subscribe to:
Posts (Atom)