16 December 2010

எப்படிப்பிடிக்க ..?



கைமீறிப்போகிற எதையும்
உடனே பிடிக்க முடிவதில்லை
குடையோ ...
பட்டாம்பூச்சியோ ....
உன் காதலோ ....
எதையும்..!

மேகஉருவம்



மேகங்கள் உருவங்களாய்
வருவதால் ....
பொம்மைகள் உறங்கிவிட்டன
குழந்தைகள் இல்லாமல்...!

ஏன்


வானமே இருக்கிறது பறந்து செல்ல
இன்னும் ஏன்
முட்டைக்கூட்டுக்குள் முடக்கம் ?



காதலின் சின்னம்


உலக காதலின்
ஒட்டுமொத்த
பனித்துளி ...!
இது என்றுமே
உடைந்து போகாத நீர்க்குமிழி ...!

முயற்சி


இலக்கு அழைக்கிறது கைதட்டி
என்னும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய்
கைகட்டி ...!

தனிமை



தனிமை என்னும் குடுவையில்
அடைந்து கிடக்கிறேன் நான் ...!
வந்து உன் அன்பென்னும்
கடலுக்குள் தள்ளிவிட்டுப் போ...!

கோபுரங்கள்



உன் கால்கள் வந்து
இடித்து விட்டுப்போவதற்காகவே
காத்திருக்கின்றன
நான் கட்டிவைத்த மணல் கோபுரங்கள்

வெற்றிடம்



வீடு அமைதியாகவே இருந்தாலும்
ஏதோ ஒரு வெற்றிடமாகவே
இருக்கிறது...
அம்மா இல்லாத நேரங்களில் ......

வாசிப்பு வரம்



படிக்கத் தெரியாத அம்மாவின்
வாசிப்பு வரத்திற்காகவே
திருமணப் பத்திரிக்கைகளின்
தீராத தவம் .......!


கண்ணாடி

புதிதாய் கட்டியிருக்கும்
உன் வீட்டுக்குள் நுழைந்த எல்லோரும்
வீட்டை சுற்றிப்பார்த்து
சந்தோசப்படுகையில் ...
நான் மட்டும் வருத்தப்படுகிறேன்
நீ சுற்றிச் சுற்றி பார்க்கும்
அந்த கண்ணாடியாய்
நான் இருந்து தொலைத்திருக்க கூடாதா ...?