05 June 2012


கேள்விகளால் நிரம்பிய இருளில் 
கிடக்கிறேன்...

பதில் வெளிச்சம் எங்குமே இல்லை ...
ஒரு தீக்குச்சியேனும் கொளுத்திப்போடுமா 
உன் விரல்கள் ...!


எல்லா பெண்களும் 
ஒவ்வொரு வாசத்தை வைத்திருக்கிறார்கள் 
நீ மட்டும் தான் வைத்திருக்கிறாய் 
தேவதையின் வாசத்தை ....!


குழந்தைகளின் உறக்கம் போல் 
ஒரு நாள் கூட விடிவதில்லை...   
அடுத்த நாளைப்பற்றிய 
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ...!



எல்லா கவலைகளையும்
மறக்க வைத்து விடுகிறது
குழந்தைகளின் புன்னகை....!  

பல வருடங்களாய் 
உபயோகப்படுத்திய 
மின்னஞ்சல் முகவரியின் 
கடவுச்சொல் மாறிவிடுகிறது 
சில நாட்களுக்கு முன் வைக்கப்பட்ட 
குழந்தையின் பெயரில்...!