07 March 2017

பெண்கள் சூழ் உலகு ..!



பேரன்பின் பிடியிலிருந்து
நழுவும் போதெல்லாம்
தாங்கிப்பிடிக்கும் கரங்களாய்
எப்போதும் இருக்கிறார்கள் சில பெண்கள்

துரோகங்களாலும்
ஏமாற்றங்களாலும் உடையும் போது
அன்பாலும் ஆறுதல்களாலும்
உயிர்ப்பிக்கிறார்கள்
தோழிகளாய் சில பெண்கள்

உண்மையாய் சண்டையிட்டு
பொய்யாய் கோபித்து
பொசுக்கென சமாதானம் ஆகிறார்கள்
அக்கா தங்கைகளாய் சில பெண்கள்

கனவுகளை பொசுக்கி
லட்சியங்களை நசுக்கி
மீளாத்துயரில் தள்ளிவிட்டு போகிறார்கள்
காதலிகளாய் சில பெண்கள்

திரும்ப முடியா பயணத்திலிருந்தோ
திருத்த முடியா பழக்கத்திலிருந்தோ
மிக இயல்பாய் மீட்டெடுக்கிறார்கள்
மனைவிகளாய் சில பெண்கள்

எத்தனைதான் நடந்தாலும்
எப்படிதான் இருந்தாலும்
இது என் குழந்தைதான் என
இப்போதும் நெகிழ்கிறார்கள்
அம்மாக்களாய் சில பெண்கள்

பெண்கள் சூழ் உலகில் வாழ்வது அறமெனில்
பெண்ணாய்ப் பிறப்பது வரம் ...!

#மகளிர்_தின_வாழ்த்துகள் :)