05 October 2016

மின் இதழ்-பதிப்பு -5

வளர்ந்த , வளர்ந்து வரும் கவிஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாய் முகநூலில் #படைப்பு என்னும் குழுமம் மாதம்தோறும் சிறந்த கவிதைகளைத் தேர்வு செய்து அந்த கவிதைகளை சிறந்த முறையில் மின்னிதழாய் வெளியிடுகிறார்கள். இது எங்களைப் போன்றவர்களுக்கு ஒரு உந்துதலையும் இன்னும் நிறைய படைக்க வேண்டுமென்ற ஆர்வத்தையும் கொடுக்கிறது.

செப்டம்பர் மாதத்திற்கான 
(மின் இதழ்-பதிப்பு -5) மின்னிதழில் எனது கவிதையையும் தேர்வு செய்திருக்கிறார்கள்.

அன்பின் நிழலெனவும் 
பிரியங்களின் நிகழ்வெனவும் 
சந்தோச நிமிடங்களில் மிதக்கிறது மனம்.

வாழ்வின் ஆகச்சிறந்த தருணங்களில் ஒன்றாய் இந்தநாளையும் இணைத்தமைக்கு நன்றிகள்.

என் கவிதையை தேர்வு செய்தவர்களுக்கு நன்றிகளும் மற்ற  கவிதையாளர்களுக்கு வாழ்த்துக்களும் ...!