தொலைந்துபோன என் தூக்கங்களை தொகுத்து வைத்திருக்கிறேன் கவிதைகளாய்..! இந்த கடந்து போன நிமிடங்களில்...!
Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts
06 December 2011
19 December 2010
எதுவுமே நடக்கவில்லை ..!
படுக்கைதலையணைகள்
கலையவில்லை ....
அலமாரி புத்தகங்கள்
கிழியவில்லை ...
பொம்மைகள் இடம்
மாறவில்லை .....
சுவற்றில் புதிய
கிறுக்கல்கள் இல்லை ...
பலூன்கள் வெடிக்கவில்லை ...
டம்ளர் தண்ணீர்
கொட்டவில்லை ...
பூக்கள் பறிக்கப்படவில்லை ....
கைப்பேசிகள் வீசப்படவில்லை ...
இப்படி எத்தனையோ இல்லைகள் ...
இன்னும் சில நாட்கள்
இப்படித்தான் இருக்கும் ....
ஆம் ...
எங்கள் வீட்டு இளவரசி
ஊருக்குப் போயிருக்கிறாள்....!
16 December 2010
15 December 2010
சின்ன உலகம்
முதல் இரண்டு நாள்
முழுதாய் இருந்தது...
மூன்றாவது நாள் வலது கையின்
நான்கு விரல்கள் காணாமல் போயிருந்தன...
அடுத்த நாள் தரைதேய்த்து இழுத்ததில்
ஆங்காங்கே சில சிறாய்ப்புகள்...
உடைந்துபோன கால்கள் இன்னும்
ஊனமாகவே இருக்கின்றன ....
நகம் கிழித்த வயிற்றுப்பகுதியில் இருந்து
சரிந்து கிடக்கிறது கொஞ்சம் குடல்கள் ...
சாயம்போன உடையின்
எல்லா இடங்களிலும் காயங்கள் ....
கலைந்துபோன கூந்தலால்
அலங்கோலமாய் கிடக்கிறது தலை ....
ஒரு காதும் ஒரு கண்ணும்
லேசான காயங்களோடு தப்பியிருந்தன ....
மூக்கு முட்டும் முழுதாய் இருந்தது ....
ஆனாலும் ....!
இன்னும் இரவு நேரங்களில்
அந்த பொம்மையை கட்டிப்பிடித்துக்கொண்டுதான்
தூங்குகிறாள் எங்கள் வீட்டு இளவரசி ...!
14 December 2010
Subscribe to:
Posts (Atom)






