19 December 2010

எதுவுமே நடக்கவில்லை ..!



படுக்கைதலையணைகள்
கலையவில்லை ....

அலமாரி புத்தகங்கள்
கிழியவில்லை ...

பொம்மைகள் இடம்
மாறவில்லை .....

சுவற்றில் புதிய
கிறுக்கல்கள் இல்லை ...

பலூன்கள் வெடிக்கவில்லை ...

டம்ளர் தண்ணீர்
கொட்டவில்லை ...

பூக்கள் பறிக்கப்படவில்லை ....
கைப்பேசிகள் வீசப்படவில்லை ...

இப்படி எத்தனையோ இல்லைகள் ...
இன்னும் சில நாட்கள்
இப்படித்தான் இருக்கும் ....

ஆம் ...
எங்கள் வீட்டு இளவரசி
ஊருக்குப் போயிருக்கிறாள்....!

No comments:

Post a Comment