19 December 2010

தவணைமுறை இறப்பு



ஒருநாளைக்கு மூன்றோ நான்கோ
மொத்தமாய் இருபது நிமிடங்கள்
இறந்துபோகலாம் ....!

செலவழிக்கும்போது சில்லரைதான்
சேர்த்துப்பார்த்தால் சில நூறுகள்
தீர்ந்துபோகலாம் ....!

பகலில் உறுமலும் ...
இரவில் இருமலும் ...
சொல்லாமல் வந்துபோகலாம் ....!

செவ்வகப்பெட்டிக்குள்
சிறையிருப்பவைதான் உன்னை
சவப்பெட்டிக்குள் தள்ளிப்போகலாம் ....!

நுரையீரல் முழுவதும்
புகையீரலாய்
மாறிப்போகலாம் ....!

கைவிரல் அளவுதான்
சிகரெட் ஆகலாம்
அது ஊர் உனக்கு வைக்கும்
கொள்ளிக்கு நீயே ஒத்திகை
பார்ப்பதாகலாம்....! 

No comments:

Post a Comment