05 February 2017

உதடுகளால் அடிக்கோடிடு

மொழிகள் தயாரித்த வார்த்தைகளை
கடன் வாங்கி கோர்க்கிறேன்
நீ கவிதையென ரசிக்கிறாய்

முற்றுப்புள்ளியில்
முடிந்துவிடுமென நினைத்தேன்
நீ முத்தம் வைத்து தொடர்கிறாய்

தலைகோதியதாய்
சிலிர்க்கிறது என் கவிதைகள்
நீ தொடுதிரையில்
தொட்டுத் தொட்டு படிப்பதால்

உனக்கு பிடித்த வார்த்தைகளை
உதடுகளால் அடிக்கோடிடு

பிடிக்காத வார்த்தைகளை
விரல்களால் தடவிக்கொடு...!!!


No comments:

Post a Comment