05 February 2017

நாட்காட்டியின் கடைசி தாள்

கிழித்து கசக்கி எறிய
காத்திருக்கிறது கூர் நிறைந்த
ஆணியில் அறையப்பட்ட
நாட்காட்டியின் கடைசி தாள்
கடிகாரத்தின் நொடிமுள் சுழற்சியில்
மெல்ல மெல்ல இறந்து
கொண்டிருக்கிறது நிகழ்காலம்
ஒரு வருடத்தையே
வழியனுப்பி வைக்க பரபரப்பாய்
ஓடிக் கடக்கின்றன
உலகின் கால்கள்
காயங்களை..., இழப்புகளை...,
சோகங்களை..,தோல்விகளை...
இந்த கடைசி பக்கத்தில்
எழுதிவிட்டு நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்
பிறக்கும் புத்தாண்டு சிறக்கும்...!


No comments:

Post a Comment