05 February 2017

கடவுளுக்கு உயிர் வந்தது

உடைந்து கிடந்த 
சாக்பீஸ் துண்டுகளால் 
தெருவோரத்தில் வரையத் தொடங்குகிறான் 
அவன் ஒரு கடவுளை

கையில் கடாயுதத்தோடு 
நிற்கும் கடவுளை
கைப்பேசியில் தற்படம் எடுப்பவர்கள் 

கவனமாய் தவிர்த்து விடுகிறார்கள் ஓவியனை

வேகமாய் விரைந்து செல்பவர்கள்
வீசிவிட்டு செல்கிறார்கள்
சில சில்லறைகளை

ஒரு வழியாய் கோடுகளால்
முடிவுக்கு வந்த கடவுள்
மகிழ்ச்சியில் உதிர்க்கிறார்
பெருமூச்சொன்றை

ஓவியத்தை கடக்கும் முன்
குழந்தை ஒன்று கையெடுத்து
கும்பிட்ட போதுதான் உயிர் வந்தது
கடவுளுக்கு ...!




No comments:

Post a Comment