05 February 2017

உலக மூச்சி நின்னு போச்சி

இந்த பொங்கலில்
அப்படியொன்றும் சிறப்பில்லை
ஏறு பூட்டிய நிலத்தையெல்லாம்
கூறு போட்டு வித்தாச்சி 
வாங்கிய கடனுக்கு
வட்டி மடங்கு பத்தாச்சி
மழை, தண்ணி இல்லாம
வெள்ளாம நின்னாச்சி
விவசாயிங்க பலபேர
தற்கொலைன்னு கொன்னாச்சி
கரும்புக்கு கூலி கேட்டு
கால் கடுக்க நடந்தாச்சி
அடிக்கரும்பு கடிக்கும் வர
ருசி அப்படியே கொடுத்தாச்சி
ரேஷன் கார்டுக்கு
கூடுதல் தாள் ஒட்டியாச்சி
இலவச வேட்டி சேலையில
இப்பவே சாயம் போயிருச்சி
ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கி
என் இனமே எதிரியாச்சி
பலர் போராட வந்ததால
போன மூச்சி திரும்பியாச்சி
எங்க வீட்டு பொங்க பான
இந்த வருஷம் ஊமையாச்சி
நாங்க இழந்ததையெல்லாம் இனி
திருப்பி தரப்போவது எந்த ஆட்சி..?
பொங்கலுக்கு வாழ்த்துகளை
சொல்லி சொல்லி என்ன ஆச்சி
கடைசி உழவனும் செத்தான்னா
உலக மூச்சி நின்னு போச்சி :(



No comments:

Post a Comment