13 May 2017

தனிமை

விடுமுறை தினங்களின்
விடியல்களில் பொதிந்திருக்கும் வெறுமையின் அடர்த்தி
மிகக் கொடியவை

ஒடிந்த சிறகோடு
உலவும் பறவையொன்று
இரைதேட பறக்கும் அவஸ்தையைப்போல்
வலி நிறைந்தவை

பிரியங்களின் கோப்பையில்
நிரம்பி வழியும் காதலை
மெளனத்தின் மூடிகொண்டு
அடைக்கும் கணங்களில்
அது இன்னும் பொங்கி வழியும்

நீளும் கரங்களைத் தொடவும்
கசியும் முத்தங்களைப் பகிரவும்
அன்பின் அணைப்பில் உருகவும்
சாயும் மடியில் உறங்கவும்
வாய்ப்புகளற்ற பொழுதொன்றில்
முளைக்கும் கேள்வியும் பதிலுமாய்

"தனிமை"
சில நேரங்களில் மிகச்சிறந்த வரம்
சில நேரங்களில் மிகக்கொடிய சாபம்....!


1 comment:

  1. தனிமை -
    சில நேரங்களில் சுகம்
    பல சமயங்களில் வலி

    ReplyDelete