யாரும் மீட்டாத
யாழென நீயும்
யாரும் திறக்காத
புத்தகமாய் நானும்
ஒரே கூரையின்
இரு மூலைகளில்
சிறையிருக்கிறோம்
நீயிருக்கும் கண்ணாடி
பேழைக்குள்ளும்
நானிருக்கும் அலமாரிக்குள்ளும்
படிந்துகிடக்கும் எச்சத்தில்
இன்னும் மிச்சமிருக்கக்கூடும்
அருகருகே அமர்ந்து
கூடிக்களித்த பொழுதுகளின்
புதைக்க முடியா நொடிகள் ...!
No comments:
Post a Comment