ஒத்தையடிப் பாதையிலே
ஒய்யாரமா போறவளே...
என் எதிரே நீ வந்தா
என்னென்னவோ பண்ணுதடி...!
தண்ணிகுடம் சுமந்துகிட்டு
தளும்பாமல் போறவளே
உன் இடுப்புல ஒரு குடமா
நான் உட்கார வேணுமடி ...!
புத்தகத்த எடுத்துகிட்டு
பூப்போல போறவளே...
உன் புத்தகத்தில் ஒரு எழுத்தா
நான் மாற வேணுமடி...!
கண்ணாலே வலைவீசி
கதைபேசி போறவளே...
உன் காலோடு கொலுசாக
நான் மாற வேணுமடி ...!
இரவெல்லாம் தூக்கமில்ல
இருந்தாலும் துக்கமில்ல...
கொஞ்சநேர கனவுலயும்
நீ தாணடி வந்து போற...!
கண்ணுக்குள்ள உன்னவெச்சி
கலங்காமல் பார்த்துக்கறேன் ...
கண்ணே உன்மனசெல்லாம்
எனை நிரப்பி வெச்சுக்கடி...!
ஒய்யாரமா போறவளே...
என் எதிரே நீ வந்தா
என்னென்னவோ பண்ணுதடி...!
தண்ணிகுடம் சுமந்துகிட்டு
தளும்பாமல் போறவளே
உன் இடுப்புல ஒரு குடமா
நான் உட்கார வேணுமடி ...!
புத்தகத்த எடுத்துகிட்டு
பூப்போல போறவளே...
உன் புத்தகத்தில் ஒரு எழுத்தா
நான் மாற வேணுமடி...!
கண்ணாலே வலைவீசி
கதைபேசி போறவளே...
உன் காலோடு கொலுசாக
நான் மாற வேணுமடி ...!
இரவெல்லாம் தூக்கமில்ல
இருந்தாலும் துக்கமில்ல...
கொஞ்சநேர கனவுலயும்
நீ தாணடி வந்து போற...!
கண்ணுக்குள்ள உன்னவெச்சி
கலங்காமல் பார்த்துக்கறேன் ...
கண்ணே உன்மனசெல்லாம்
எனை நிரப்பி வெச்சுக்கடி...!
No comments:
Post a Comment