14 December 2010

விடுதலை செய்....!.


காதல்
ஒரு பகடைக்காய்
அது என்னை உருட்டிவிட்டு சிரிக்கிறது ...
நீயோ ..
உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறாய் ...

என்னை புல்லாங்குழலாக்கி
இசைக்க நினைக்கிறது
நீயோ.....
கண்மூடி காது பொத்துகிறாய்...
உதடு நிறைய
புன்னகை நிரப்ப பார்க்கிறது
நீயோ .......
மௌனத்தை கெட்டியாக
பிடித்துக்கொண்டிருக்கிறாய்

ஆனந்த மழையால்
நம்மை நனைக்க நினைக்கிறது
நீயோ.........
தடை என்னும்
குடை பிடிக்கிறாய் ....

காதல்
ஒரு கவிதையாய்
என்னை எழுதி இருக்கிறது
நீயோ.......
எழுத்துப்பிழைகளைத் தேடுகிறாய்

சிரிக்கும் பனித்துளியே
இந்த கவிதைக்கு
ஒரு முத்தம் கொடுத்து
முற்றுப்புள்ளி வை.....

உன் வெட்கங்களை
விடுதலை செய்.....

No comments:

Post a Comment