14 December 2010

உன் நினைவுகள் மட்டும்....


இதுவரை.....
நான் நடை பழகிய தெருக்கள் ...
மண்டிபோட்டு குண்டு
விளையாடிய மைதானங்கள் ...
முண்டியடித்து முதல் காட்சி பார்த்த
திரையரங்குகள் ...
என் நிழலில் ஓய்வெடுத்த மரங்கள் ...
நான் குதித்து குளித்த நதிகள் ....
எட்டி உதைத்தாலும்
ஏற்றுக்கொள்ளும் மிதிவண்டி ...
என்னை தொலையாமல்
பார்த்துக்கொண்ட புத்தகங்கள் ...
என்னை தொல்லை செய்யும் தோழிகள் ....
என்னை தூங்க வைத்த தூளிகள் ..
என்னை தாங்கிக்கொண்ட நாற்காலிகள் ..
தமிழ் கற்றுக்கொடுத்த பள்ளிக்கூடம் ...
அன்பு கற்றுக்கொடுத்த அம்மா ...
அனைத்தும் கற்றுக்கொடுத்த நட்பு ....
எல்லாத்தையும் ...
எல்லாத்தையும் .....
விட்டு.... விட்டு...
வந்துவிட்டேன் .... ஆனாலும் ...
உன் நினைவுகள் மட்டும்
என்னை விட்டு விடாமல்
என் நிழல் போல கூடவே வருகிறது ......!!!

No comments:

Post a Comment