14 December 2010

யாரிடமடா சொல்லித்தொலைப்பது..?


புள்ளிகளை மட்டும் வைத்துவிட்டு ...
கோலம் போடாமல் திரும்புகிறேன்

பிரஸ்சில் பேஸ்ட்டை எடுத்துக்கொண்டு
வெறும் விரலால்
பல் தேய்க்கிறேன்......

குளிக்கவே இல்லை
தலை துவட்டுகிறேன்......

நெற்றியில் வைக்க வேண்டிய
ஸ்டிக்கர் பொட்டை
மூக்கில் வைக்கிறேன் ......

கல்லூரி போகிறவள்
தம்பியின் ஏழாவது
புத்தகங்களோடு பயணிக்கிறேன் .......

தோழிகள் என்று நினைத்து
மரங்களுடன்
பேசிக்கொண்டிருக்கிறேன்.......

கோவிலுக்கு சென்றால்
பிரகாரத்தை
பின்பக்கமாக சுற்றுகிறேன்...

வெறும் தட்டிலேயே
வயிறு நிறைய சாப்பிடுகிறேன்.....

மெத்தையில்
தலையணையை வைத்துவிட்டு
தரையில் படுக்கிறேன்....

என்னுள்
இவ்வளவு மாற்றங்களையும்
ஏற்படுத்தியவன்
நீதானென்பதை
நான் யாரிடமடா
சொல்லித்தொலைப்பது
இப்போது....?

No comments:

Post a Comment