14 December 2010

ஒப்புக்கொள்கிறது மனசு ...!


அறுந்து போன பட்டம் போல
அந்தரத்தில் ஊசலாடுகிறது வாழ்க்கை ...

வெயிலோ ..மழையோ ...
எதுவாக இருப்பினும் ...
நிழலோ ..குடையோ ..
ஒரு சிலருக்கே வாய்க்கிறது...!

அலாரங்களுக்கு முன்பாகவே எழுந்து ...
அவசரங்களின் ஊர்வலங்களில் கலந்து ...
ஏதோ ஒன்றின் பின்னால் இருட்டுக்குள் ஓடி ..
வெளிச்சத்தில் தொலைந்து போகிறோம் ...!

இடையில் கால் தடுக்கிய இடத்தில் நின்று
திரும்பிப்பார்த்தால் ....
நேற்றைகளின் சமாதி
நெடுந்தூரம் நீள்கிறது ...!

பின்பு ...
அழுக்கு படிந்த காற்றுக்குள்
பயணித்து... பயணித்து...
புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கிறோம் ..!

எல்லோரும் அவரவர் வீடுகளில்
அடைபட்டவுடன் ஒப்புக்கொள்கிறது மனசு ..
உலகம் உருண்டையென்று...!

No comments:

Post a Comment