24 November 2017

எஞ்சி நிற்கும் வருத்தம்

கனவால் செய்த பலூனொன்று
சொற்கள் குத்தியதால்
பெரிதாய் சத்தமிட்டு உடைகிறது

திட்டங்களின் நூலறுந்து
அந்தரத்தில் தொங்குகிறது
தொகுத்த வார்த்தைகள்

பிம்பங்களுக்குள் வந்துபோன
சந்தோச நிமிடங்கள்
சட்டென மறைந்து காணாமல் போகின்றன

சுமந்து வைத்திருந்த
பிரியங்களின் கூடையில்
இப்போது முட்கள் மட்டுமே
நிரம்பி வழிகிறது

எனக்கு ஆறுதல் தேவைப்படவில்லை
உனக்கு கொடுத்து வைக்கவில்லையென்ற
வருத்தம் மட்டுமே எஞ்சி நிற்கிறது...!


No comments:

Post a Comment