24 November 2017

வாசித்துப் போ

ரோஜாக்களாலும்
சந்தனத்தாலும் செய்த
துளைகளற்ற இரட்டைப் புல்லாங்குழல்
உன் உதடுகள்

நான் வாய் வைத்து ஊதுகையில்
சங்கீதத்தோடு சேர்ந்து வெளிவருகிறது
உன் வெட்கமும்

வாசிப்பவன் திறந்திருக்க
புல்லாங்குழல் கொண்ட பூ உடலே
நீ ஏன் கண் மூடுகிறாய்

ராகங்கள் தடுமாறி
பாதைகள் தடம் மாறினாலும்
சம்மதம்

ஒருமுறை என்னைப் புல்லாங்குழலாக்கி
உன் உதடுகளால் முழுமையாய் வாசித்துவிட்டுப் போ ...!


No comments:

Post a Comment