மனதின் ஓரங்களில்
அங்குமிங்கும் அலையும்
வார்த்தைகளை வடிகட்டி
கொஞ்சம் மகிழ்வும்
கொஞ்சம் வலியும்
கலந்து கோர்க்கிறேன்
அது வாக்கியங்களாகவும்
சில நேரங்களில்
யாரோ ஒருவருடைய
வாழ்க்கையாகவும் மிளிர்கிறது
கடந்து வந்த நாளை
காத்திருக்கும் நாளைகளோடு
சேர்த்து திரிக்கையில்
அது சிலநேரங்களில்
விருப்பக் குறியீடுகளாகவோ
விமர்சனங்களாகவோ மாறிவிடுகிறது
மொழியை நேசிக்குமொரு
தருணத்தில் வந்துவிழும்
சொற்களைப் பொருக்கி
புதிதாய் நெய்ய முயல்கிறேன்
அது சில நேரங்களில்
அனுபவமாகவோ
எதிர்பார்ப்பாகவோ அடங்கிவிடுகிறது
எனக்கென நேரமெடுத்து
பிரியங்களின் அன்பிலோ
பிரிவுகளின் துயரிலோ
வாழும் நொடிகளை
கவிதையாக்க நினைக்கிறேன்
அந்த எழுத்துக்களோ
என்னை இன்னும் வாசகனாகவே
வைத்திருக்கின்றன ....!!!
அங்குமிங்கும் அலையும்
வார்த்தைகளை வடிகட்டி
கொஞ்சம் மகிழ்வும்
கொஞ்சம் வலியும்
கலந்து கோர்க்கிறேன்
அது வாக்கியங்களாகவும்
சில நேரங்களில்
யாரோ ஒருவருடைய
வாழ்க்கையாகவும் மிளிர்கிறது
கடந்து வந்த நாளை
காத்திருக்கும் நாளைகளோடு
சேர்த்து திரிக்கையில்
அது சிலநேரங்களில்
விருப்பக் குறியீடுகளாகவோ
விமர்சனங்களாகவோ மாறிவிடுகிறது
மொழியை நேசிக்குமொரு
தருணத்தில் வந்துவிழும்
சொற்களைப் பொருக்கி
புதிதாய் நெய்ய முயல்கிறேன்
அது சில நேரங்களில்
அனுபவமாகவோ
எதிர்பார்ப்பாகவோ அடங்கிவிடுகிறது
எனக்கென நேரமெடுத்து
பிரியங்களின் அன்பிலோ
பிரிவுகளின் துயரிலோ
வாழும் நொடிகளை
கவிதையாக்க நினைக்கிறேன்
அந்த எழுத்துக்களோ
என்னை இன்னும் வாசகனாகவே
வைத்திருக்கின்றன ....!!!
No comments:
Post a Comment