உனது
முத்தங்களின் பசிக்கு அழாமல்
கொஞ்சல்களுக்கு ஏங்காமல்
தாலாட்டுக்கு காத்திருக்காமல்
உறங்குமொரு குழந்தையென
அமைதியாய் இருக்கிறதுன் நினைவுகள்
மீன்களில்லா குளத்தில் போடும்
தூண்டிலைப்போல சமயங்களில்
வெறுமை சிக்கிக்கொள்ளும்
கொக்கிகளாய் நகர்கிறது நாட்கள்
தவறியும் அவிழ்த்துவிடாத
நம் சிநேகத்தின் முடிச்சுகளில்
இறுக்கம் இன்னும் கூடியிருக்கலாம்
உன்மீதான காதலைப்போலவே
மிகச்சரியாய் எய்யப்பட்ட அம்பில்
காயப்பட்ட பறவையின்
சிறகுகளுக்கு வலுவிழந்து போகலாம்...
அது வானத்தை அடையும் திசையை நோக்கி
மீண்டும் பறக்கும்...!
No comments:
Post a Comment