24 November 2017

என்னவாகும் வார்த்தைகள்


உன் குழிவிழும் கன்னத்தில்
இட்டு நிரப்ப நிறைய
முத்தங்கள் சுமந்து வருகிறேன்
நீயோ சிரிக்க மறுக்கிறாய்

உன் மடிமீது உறங்குமொரு
தருணத்தை நோக்கி தவமிருக்கிறேன்
நீயோ வரம் தராமல் விரதமிருக்கிறாய்

யாருமற்ற சாலையில்
உன் விரல் கோர்த்தபடி
நெடுந்தூரம் நடக்க நினைக்கிறேன்
நீயோ எதிர் திசையிலேயே பயணிக்கிறாய்

கவிதைகளோடு நானும்
கவிதையாய் நீயும்
பேச நினைக்கையில்
நீ மௌனத்தை துணைக்கு அழைக்கிறாய்

சொற்கள் நிறைந்த ஒரு சூழலில்
பிரியங்களின் விரல் பிடித்தபடி
உன்னை நானும்
என்னை நீயும்
தேடுமொரு நாளில்
நம் இருவருக்குமே நாம் கிடைக்காமல் போகலாம்
அப்போது சேர்த்துவைத்த வார்த்தைகள் என்னவாகும்...???


No comments:

Post a Comment