24 November 2017

கிடைக்காமலே இருந்திருக்கலாம்

கிடைக்காமலே இருந்திருக்கலாம்
இந்த சுதந்திரம்...!

வெள்ளையர்கள் ஆண்டபோது கூட
இத்தனை அடிமைத்தனங்கள் இல்லை
இந்தக் கொள்ளையர்களால்
ஒவ்வொரு விடியலிலும் ஒரு
புது வரித்தொல்லை

வரி கொடுத்துவிட்டு
வாய்க்கரிசி போடு என
வரிசையில் நிற்கிறார்கள்

ஆதாரை காட்டிவிட்டு
அடக்கம் செய்யென
அனுப்பி வைக்கிறார்கள்

குடும்ப அட்டையை பிடுங்கி விட்டு
கோமாணத்தை கொடுக்கிறார்கள்
நாட்டை ஏலம் போட்டு விற்றுவிட்டு
கோடிகளில் திளைக்கிறார்கள்

குழந்தைகளைக் கொன்றுவிட்டு
மதங்களை வளர்க்கிறார்கள்
மாடுகளை அவிழ்த்துவிட்டு
அரசியல் நடத்துகிறார்கள்

விவசாயம் அழித்துவிட்டு
வேடிக்கை பார்க்கிறார்கள்
தண்ணீரை தடுத்துவைத்து
தத்துவம் சொல்கிறார்கள்

நெல் விளையும் நிலமெல்லாம்
மீத்தேனால் மிதக்கின்றன
விஞ்ஞான அறிவெல்லாம்
வீணாகப் போகின்றன

ஆணுறையை
இலவசமாய்க் கொடுத்துவிட்டு
நாப்கினுக்கு அதிகபட்ச வரியாம்
புதிய இந்தியா பிறப்பதற்கு
இவர்கள் செய்வதுதான் சரியாம்

சுதந்திரத்தை கொண்டாட
பல வெள்ளையர்களை வசைபாட வேண்டாம்
சில கொள்ளையர்களிடமிருந்து
மீட்டெடுத்தாலே போதும்

இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு
இந்த சுதந்திரம்
கிடைக்காமலே இருந்திருக்கலாம்....!


No comments:

Post a Comment