24 November 2017

நுரைப்பெண்


குடம் தீர்க்கும் தாகமெனக்கு
நீ சங்கடையில் நீட்டுகிறாய்

கரும்புதின்ன வந்தவனிடம்
பல்குச்சியை திணிக்கிறாய்

பெரும்பசியில் இருப்பவனுக்கு
ஒரு பருக்கை கொடுக்கிறாய்

அடைமழைக்கு காத்திருப்பவனுக்கு
பன்னீர் மட்டும் தெளிக்கிறாய்

வார்த்தைகளில் நனைய வந்தவனுக்கு
மெளனக்குடை பிடிக்கிறாய்

உதடுகள் குவிந்த நொடியில்
முத்தத்தடை விதிக்கிறாய்

சுமக்கமுடியா காதலும்
எழுதமுடியா கவிதைகளுமாய்
நிரம்பி வழியும்
நானென்ற கோப்பைக்குள்
நீ நுரையாய்த் ததும்புகிறாய்....!


No comments:

Post a Comment