குடம் தீர்க்கும் தாகமெனக்கு
நீ சங்கடையில் நீட்டுகிறாய்
கரும்புதின்ன வந்தவனிடம்
பல்குச்சியை திணிக்கிறாய்
பெரும்பசியில் இருப்பவனுக்கு
ஒரு பருக்கை கொடுக்கிறாய்
அடைமழைக்கு காத்திருப்பவனுக்கு
பன்னீர் மட்டும் தெளிக்கிறாய்
வார்த்தைகளில் நனைய வந்தவனுக்கு
மெளனக்குடை பிடிக்கிறாய்
உதடுகள் குவிந்த நொடியில்
முத்தத்தடை விதிக்கிறாய்
சுமக்கமுடியா காதலும்
எழுதமுடியா கவிதைகளுமாய்
நிரம்பி வழியும்
நானென்ற கோப்பைக்குள்
நீ நுரையாய்த் ததும்புகிறாய்....!
No comments:
Post a Comment