15 December 2010

உன் பிறந்தநாளுக்காக




என் நிழலின் விரல் பிடித்து
நீண்ட தூரம் நடக்க இருப்பவளே......
ஒவ்வொரு அணுவிலும்
என் உயிரோடு கலந்திருப்பவளே ......
பெரிதாய் பெய்யும் மழையில்
துளித் துளியாய் நனைவது போல் .....

உன் பெரிய அன்பில்
சின்ன சின்னதாய் நனைகிறேன்....

ஒரு தேவதையின்
எல்லா அம்சங்களோடும்
அழகாகவே இருக்கிறாய் ....

உன் புன்னகை
உன் வெட்க்கம்
உன் கண்ணீர்
உன் கோபம்
உன் சிணுங்கள்
உன் கெஞ்சல்
உன் கொஞ்சல்
உன் சோம்பல்
எல்லாம் ....
எல்லாம் ...
உன்னைப்போலவே
அழகாக இருக்கின்றன ...

அவைதான் உன்னை
இன்னும் அழகாக மாற்றுகின்றன....

எல்லா கண்களும்
உன்னையே பார்ப்பது போல் .....
எல்லா புகைப்பட கருவிகளும்
உன்னையே படம் பிடிக்க நினைக்கிறது ......
இன்று நீ அணிந்து அழகு பார்த்தது
ஒரு உடைதான்...
உன்னை அணிய முடியாமல்
அழுது கொண்டிருக்கின்றன
பல உடைகள்...

உன் விரல் பிடித்து நடக்க விண்மீன்களும்
உன் முகம் பார்த்துக்கிடக்க முழுநிலவும் ...
உன் சுவடுகள் ஏந்த கடற்க்கரையும் ...
உன் பாதம் நனைக்க கடல் அலையும் ...
உன் கூந்தல் பிடிக்க பூக்கடையும் ...
உன் குறும்பை ரசிக்க நானும்
காத்திருக்கிறோம் ....

நீ வந்து ஏற்றாமல் தீபங்கள் எரியாது ..
நீ வந்து பார்க்காமல் கடவுளும் கிடையாது ...

உலகப் பூக்களெல்லாம்
ஒன்று கூடினாலும்
உன் புன்னகை தோற்காது ....

உன் விரல்களின் ரேகை
மறையாமல் இருப்பது போல்...
உன் உதடுகளின் புன்னகை
குறையாமல் இருக்கட்டும் ...

உன் எல்லா பிறந்த நாளிலும்
உலகம் சிரிக்கட்டும்.........
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ... !!

No comments:

Post a Comment