15 December 2010

ஒரு சில மழைகள்


ஒரு அழகான சாயங்கால வேளை..
வானம் தண்ணீர் துளிகளை அனுப்பி
பூமியின் நலம் விசாரிக்கிறது ....

ஜன்னலோர கம்பிகலோடு
நானும் நனைந்து கொண்டிருக்கிறேன் ...
முகத்தில் தெறிக்கிறது
ஒரு சில சாரல்கள் ...
வானவில்லில் வந்து போகிறது
அவள் வெட்க்கத்தின் நிறம் ...
கூடுகளைத்தேடி ஓடுகிறது
ஒரு சில பறவைகள் ....
குடைகள் தேடி அலைகிறது
ஒரு சில கண்கள் ...
தேநீர் தேடி அலைகிறது
ஒரு சில உதடுகள் ....
ஒழுகும் வீடுகளை அடைக்க
பொருள்தேடி அலைகிறது
ஒரு சில கைகள் ...
மழைநீரை வாரி இறைத்து விரைகின்றன
ஒரு சில நகர பேருந்துகள் ...
நனைந்த படி நகர்கின்றன
ஒரு சில கிராமத்து மாட்டுவண்டிகள் ...
கோணிப்பைகளில் குருகிக்கிடக்கிறது
ஒரு சில உயிர்கள் ....

எல்லாவற்றுக்கும் நடுவே
இந்த வருடமாவது வறுமை தீரவேண்டுமென
வருத்தமுடன் வேண்டிக்கொண்டிருக்கிறான்
எங்கோ ஒரு விவசாயி ....!

ஆனாலும் ..
இன்னும் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறது
ஒரு சில மழைகள் ....

No comments:

Post a Comment