உன்னை நனைத்து
என்னை துவட்டுகிறது ...
நீ நடக்க
எனக்கு குடைவிரிக்கிறது ...
உன்னை கவிதையாக்கி
என்னை மொழிபெயர்க்கிறது ...
நீ உறங்க
எனக்கு தாலாட்டுகிறது ...
உன்னை சிரிக்கவைத்து
என்னை நிரப்புகிறது ...
நீ சிவக்க
எனக்கு சிலிர்க்கிறது ...
உன்னைப் படைத்து
என்னைப் படுத்துகிறது ...
உன்னில் தொடங்கி
உன்னிலே முடியும்
ஒரு வாழ்வின் மீதிப் பாதியில்
இன்னும் மிச்சமிருக்கிறது ...
கா ... த ...ல்
No comments:
Post a Comment