எனக்குத் தெரியும்
உன்னோடு நானற்ற பொழுதுகளில்
காலம் உனக்கு நொடி நொடியாகவே கரையும்
என்னோடு நீயில்லா ஒரு மணி நேரம்
எனக்கு யுகம் யுகமாய் விரியும்
உன்னில் விழுந்து
உன்னிலே தொலைந்தவன்
முன்னெழுந்து பின்தூங்கினாலும்
கனவின் கக்கத்தில் நீ வேண்டுமெனக்கு
தீண்டத் தீண்ட
வெட்கங்களும் முத்தங்களும் கொடுக்கும் நீ
ரகசியங்கள் நிரம்பிய குட்டிக்கிடங்கு
இரவிலென் நிழல் பிரிந்தாலும்
துடிக்கும் ஓசையில்
அதிரும் மெளனத்தில்
இடப்பக்க இதயத்தில் எப்பொதுமிருக்கிறாய்
நீயின்றி ஒருநாள்
உன் நினைப்பின்றி சில சிலநாட்கள்
உன்னைத் தொடாமல் சில மாதங்கள்
வாழ்ந்து பார்க்க ஆசைதான்
அதற்கான வாய்ப்புகளற்ற
சாபத்தின் சாயல்கள் சுமந்தபடிதான்
விடிகிறது ஒவ்வொரு இரவும்
யாராவது சொல்லுங்களேன்
இந்த #கைப்பேசி இல்லாமல்
வாழவே முடியாதா???
No comments:
Post a Comment