March 8 2014
உலகம் என்னும் நான்கெழுத்து சொல்அன்பு.. பாசம்.. கருணை.. தாய்மை..
என்ற மூன்று எழுத்து சொற்களோடு
இன்னும் சுறுசுறுப்பாய் சுற்றிக்கொண்டிருப்பதற்கு
இன்னொரு காரணம் இரண்டெழுத்து பெண்..!!!பெண் என்பவள் சதையையும் எலும்புகளையும்
தோலால் போர்த்தப்பட்ட பொருளல்ல ....!அவள் ...!
வெட்கங்களால் செய்யப்பட்ட வீணை ....!
விரல்கள் முளைத்த நீர்வீழ்ச்சி.....!நீளமாய் வளர்ந்த ஒற்றை மழைத்துளி...!
தெருவில் உலா போகும் தேர்....!
பூக்களை திறக்கும் சாவி....
புன்னகையில் கொல்லும் பாவி...!
சேர்த்து வைக்கப்பட்ட மௌனத்தின் பாடல்....!
ஒட்டுமொத்த மொழிகளின் ஒற்றைக்கவிதை....!வானவில் உடுத்த நினைக்கும் ஓவியம்....!
பூமியை தனக்காக சுற்ற வைக்கும் நிலா ....!சூரியனை சுட நினைக்கும் நெருப்பு...!
கடலை கைக்குட்டையாக்கும் கருவி...!நட்சத்திரங்களை மேடையாக்கும் நாட்டியக்காரி...!
தென்றல் சேலை உடுத்தும் சோலை...!சொர்கத்தின் பாதி சுனாமியின் மீதி ...!
வீட்டுக்குள் சுழலும் பூமி வீதியில் நடக்கும் சாமி ...!
கடவுள் இருந்த தவம் ஆண்கள் வாங்கிய வரம்...!பிரம்மன் படைத்த பேரதிசயம் ....!!!அம்மாவாய் ...அண்ணியாய் ...
அக்கா தங்கையாய் ...
தோழிகளாய்....
எதிர்கால மனைவியாய் ...
சொந்தங்களாய்...
என்னை சுற்றி இருக்கும்
எல்லா பெண்களுக்கும்
இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்...!
No comments:
Post a Comment