பிரியங்களின் பெருவாசலில்
தனித்திருப்பது அத்தனை சுலபமல்ல
தனிமை போர்த்தியபடி
மெல்ல நகரும் பொழுதுகள்
நரகத்தை நினைவூட்டும்
துக்கம் மிகுந்து தூக்கம் துறந்த
இரவுகளை தலையணைக்கடியில்
ஒளித்து வைக்கச் சொல்லும்
பசி நிறைந்த பகல்கள்
மெளனத்தை சமைத்து
உணவாய்த் திண்ணும்
பெயரற்ற உருவங்கள்
மூளை மடிப்புகளில்
முன்னும் பின்னும் மின்னும்
அழகிய முரண்களோடு
அர்த்தமற்ற சண்டைகளால்
மனம் திணறி பிரிந்திருப்பதை விட
தனித்தே இருந்துவிடலாமென்றும்
தோன்றும் ....!
No comments:
Post a Comment