24 November 2017

பிரியங்களின் வலி




பிரியங்களின் பெருவாசலில்
தனித்திருப்பது அத்தனை சுலபமல்ல

தனிமை போர்த்தியபடி
மெல்ல நகரும் பொழுதுகள்
நரகத்தை நினைவூட்டும்

துக்கம் மிகுந்து தூக்கம் துறந்த
இரவுகளை தலையணைக்கடியில்
ஒளித்து வைக்கச் சொல்லும்

பசி நிறைந்த பகல்கள்
மெளனத்தை சமைத்து
உணவாய்த் திண்ணும்

பெயரற்ற உருவங்கள்
மூளை மடிப்புகளில்
முன்னும் பின்னும் மின்னும்

அழகிய முரண்களோடு
அர்த்தமற்ற சண்டைகளால்
மனம் திணறி பிரிந்திருப்பதை விட
தனித்தே இருந்துவிடலாமென்றும்
தோன்றும் ....!

No comments:

Post a Comment