உன் முத்தங்களைப் போலவே
பொசுக்கென பொழியும் மழையில்
நனைகிறது மனம்
இரவில் பொழியும் மழையில்
நீ அருகில் இல்லை
முந்தானை குடை பிடிக்க
ஜன்னலில் தெறிக்கும் துளிகளில்
சிதறுகிறது உன் சிரிப்பை போல
சில குட்டி மழைகள்
கன்னத்தில் விழுந்து
கழுத்திலிறங்கும்
ஒரு துளி பயணிக்கிறது
உன் விரல்களைப்போல
உன்னை நனைக்கும் மழைத்துளிகள்
தேனாய் மாறலாம்
என்னை நனைக்கும் மழைத்துளிகள்
நீயாய் மாறலாம்
இருளில் மிதக்கும் இரவைப்போல்
உன் நினைவில் மிதக்க வைக்கிறது
இந்த மழை...!
No comments:
Post a Comment