தொலைந்துபோன என் தூக்கங்களை தொகுத்து வைத்திருக்கிறேன் கவிதைகளாய்..! இந்த கடந்து போன நிமிடங்களில்...!
19 December 2010
தவணைமுறை இறப்பு
ஒருநாளைக்கு மூன்றோ நான்கோ
மொத்தமாய் இருபது நிமிடங்கள்
இறந்துபோகலாம் ....!
செலவழிக்கும்போது சில்லரைதான்
சேர்த்துப்பார்த்தால் சில நூறுகள்
தீர்ந்துபோகலாம் ....!
பகலில் உறுமலும் ...
இரவில் இருமலும் ...
சொல்லாமல் வந்துபோகலாம் ....!
செவ்வகப்பெட்டிக்குள்
சிறையிருப்பவைதான் உன்னை
சவப்பெட்டிக்குள் தள்ளிப்போகலாம் ....!
நுரையீரல் முழுவதும்
புகையீரலாய்
மாறிப்போகலாம் ....!
கைவிரல் அளவுதான்
சிகரெட் ஆகலாம்
அது ஊர் உனக்கு வைக்கும்
கொள்ளிக்கு நீயே ஒத்திகை
பார்ப்பதாகலாம்....!
எதுவுமே நடக்கவில்லை ..!
படுக்கைதலையணைகள்
கலையவில்லை ....
அலமாரி புத்தகங்கள்
கிழியவில்லை ...
பொம்மைகள் இடம்
மாறவில்லை .....
சுவற்றில் புதிய
கிறுக்கல்கள் இல்லை ...
பலூன்கள் வெடிக்கவில்லை ...
டம்ளர் தண்ணீர்
கொட்டவில்லை ...
பூக்கள் பறிக்கப்படவில்லை ....
கைப்பேசிகள் வீசப்படவில்லை ...
இப்படி எத்தனையோ இல்லைகள் ...
இன்னும் சில நாட்கள்
இப்படித்தான் இருக்கும் ....
ஆம் ...
எங்கள் வீட்டு இளவரசி
ஊருக்குப் போயிருக்கிறாள்....!
Subscribe to:
Comments (Atom)







