தொலைந்துபோன என் தூக்கங்களை தொகுத்து வைத்திருக்கிறேன்
கவிதைகளாய்..! இந்த கடந்து போன நிமிடங்களில்...!
14 December 2010
உன் பெயர் சொல்லியே....
இமைகளின் அரவணைப்புக்காக
இரவு வருகிறது ...
என் இதயத்தின் துடிப்புக்காக
உன் நினைவு வருகிறது ...
தூரத்து வானம்
தூவும் மழைத்துளிகள் எல்லாம்
உன் பெயர் சொல்லியே
உடைந்து போகிறது ...
என் எல்லா இரவுகளும்
உன் பெயர் சொல்லியே
விடிந்து போகிறது ....
No comments:
Post a Comment