பனி பொழியும் இரவில்
தெருவடைத்து
பெண்கள் போடும் கோலங்களை
இன்னும் அழகாக்குகிறது
குழந்தைகளின் விரல்களிலிருந்து
கசியும் கலர் பொடிகள்
எல்லா வாசல்களையும்
நடந்து கடந்து விமர்சிக்கும்
பெண்களால் நிறைகிறது
அர்த்த ராத்திரி வீதி
தூரத்தில் கேட்கும் சிரிப்பொலியில்
சிலிர்த்து புரள்கிறது
வெட்கத்தில் ஒரு கோலம்
காதலை கலக்கி
யாரோ ஒருத்தி போட்ட
கலர் கோலத்திலிருந்து
உயிர்ப்பெற்று நடக்கத் தொடங்குகிறது
ஒரு மயில்
தெருவடைத்து
பெண்கள் போடும் கோலங்களை
இன்னும் அழகாக்குகிறது
குழந்தைகளின் விரல்களிலிருந்து
கசியும் கலர் பொடிகள்
எல்லா வாசல்களையும்
நடந்து கடந்து விமர்சிக்கும்
பெண்களால் நிறைகிறது
அர்த்த ராத்திரி வீதி
தூரத்தில் கேட்கும் சிரிப்பொலியில்
சிலிர்த்து புரள்கிறது
வெட்கத்தில் ஒரு கோலம்
காதலை கலக்கி
யாரோ ஒருத்தி போட்ட
கலர் கோலத்திலிருந்து
உயிர்ப்பெற்று நடக்கத் தொடங்குகிறது
ஒரு மயில்
No comments:
Post a Comment