உடைந்து கிடந்த
சாக்பீஸ் துண்டுகளால்
தெருவோரத்தில் வரையத் தொடங்குகிறான்
அவன் ஒரு கடவுளை
கையில் கடாயுதத்தோடு
நிற்கும் கடவுளை
கைப்பேசியில் தற்படம் எடுப்பவர்கள்
கவனமாய் தவிர்த்து விடுகிறார்கள் ஓவியனை
வேகமாய் விரைந்து செல்பவர்கள்
வீசிவிட்டு செல்கிறார்கள்
சில சில்லறைகளை
ஒரு வழியாய் கோடுகளால்
முடிவுக்கு வந்த கடவுள்
மகிழ்ச்சியில் உதிர்க்கிறார்
பெருமூச்சொன்றை
ஓவியத்தை கடக்கும் முன்
குழந்தை ஒன்று கையெடுத்து
கும்பிட்ட போதுதான் உயிர் வந்தது
கடவுளுக்கு ...!
சாக்பீஸ் துண்டுகளால்
தெருவோரத்தில் வரையத் தொடங்குகிறான்
அவன் ஒரு கடவுளை
கையில் கடாயுதத்தோடு
நிற்கும் கடவுளை
கைப்பேசியில் தற்படம் எடுப்பவர்கள்
கவனமாய் தவிர்த்து விடுகிறார்கள் ஓவியனை
வேகமாய் விரைந்து செல்பவர்கள்
வீசிவிட்டு செல்கிறார்கள்
சில சில்லறைகளை
ஒரு வழியாய் கோடுகளால்
முடிவுக்கு வந்த கடவுள்
மகிழ்ச்சியில் உதிர்க்கிறார்
பெருமூச்சொன்றை
ஓவியத்தை கடக்கும் முன்
குழந்தை ஒன்று கையெடுத்து
கும்பிட்ட போதுதான் உயிர் வந்தது
கடவுளுக்கு ...!
No comments:
Post a Comment