இத்தனை
வருடங்களுக்குப் பிறகு
நீ வந்தபோது நெகிழ்ச்சியால்
நிரம்பியது என் வீடு
உள்நுழைகையில்
நீ எந்தக்காலெடுத்து வைத்தாயோ தெரியாது என்கால்கள் தரையிலில்லாமல்
இருந்ததை நீ பார்த்திருக்க மாட்டாய்
நீ குடித்துவிட்டு வைத்த பழச்சாற்றின் கடைசிச்சொட்டில் நூற்றுக்கணக்கான முத்தங்கள் மிதந்ததை
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை
ஆட்டோகிராப் நோட்டில்
அடைப்புக்குறிக்குள் நீ எழுதித்தந்த வார்த்தைகளை அதே வெட்கத்துடன்தான் இப்போதும் படித்தாய்
புரட்டிப்பார்த்த புகைப்பட தொகுப்பில்
உன்படத்தில் கசிந்த நினைவுகளின் மேல் புதுப்பிக்கிறாய்
பழைய புன்னகையை
விடைபெற்று வீடுதிரும்ப
பேருந்தில் புறப்பட்டபோதுதான்
புரிந்துகொண்டேன்
போய்க்கொண்டிருப்பது
நீ மட்டுமல்ல என்பதை...!
வருடங்களுக்குப் பிறகு
நீ வந்தபோது நெகிழ்ச்சியால்
நிரம்பியது என் வீடு
உள்நுழைகையில்
நீ எந்தக்காலெடுத்து வைத்தாயோ தெரியாது என்கால்கள் தரையிலில்லாமல்
இருந்ததை நீ பார்த்திருக்க மாட்டாய்
நீ குடித்துவிட்டு வைத்த பழச்சாற்றின் கடைசிச்சொட்டில் நூற்றுக்கணக்கான முத்தங்கள் மிதந்ததை
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை
ஆட்டோகிராப் நோட்டில்
அடைப்புக்குறிக்குள் நீ எழுதித்தந்த வார்த்தைகளை அதே வெட்கத்துடன்தான் இப்போதும் படித்தாய்
புரட்டிப்பார்த்த புகைப்பட தொகுப்பில்
உன்படத்தில் கசிந்த நினைவுகளின் மேல் புதுப்பிக்கிறாய்
பழைய புன்னகையை
விடைபெற்று வீடுதிரும்ப
பேருந்தில் புறப்பட்டபோதுதான்
புரிந்துகொண்டேன்
போய்க்கொண்டிருப்பது
நீ மட்டுமல்ல என்பதை...!
No comments:
Post a Comment