கோவில் திருவிழாவின்
கொண்டாட்டத்தில்
உடம்பெல்லாம் சிவந்தபடி ஆடுகிறார்
காளி வேடமிட்டவர்
ஒப்பனைகளால் மூழ்கியவரை
கடவுளாகவே நினைத்து
காலில் விழுகிறார்கள்
அவரும் அழகாய் ஆசிர்வதிக்கிறார்
ஆட்டம் முடிந்ததும்
ஓய்வெடுக்கும் காளிக்கு உறுத்துகிறது
சுமக்கும் சூலாயுதமும் கிரீடமும்
பின்பக்கம் ஒட்டவைத்த கைகளும்
மிரட்டும் விழிகளோடும்
துருத்தும் நாக்கோடும்
நிற்கும் காளிகண்டு பயமற்று பக்கம்நின்று
புகைப்படம் எடுத்துக்கொண்ட சிறுவனிடம்
வேண்டுதல் வைக்கிறாள் காளி
அவன் கொண்டுவந்த தண்ணீரில்
தாகம் தீர்த்தபடி
ஒப்பனைகளைக் களையும் காளிக்கு தெரிந்திருக்கக்கூடும்
சிறுவன் ஒரு தெய்வமாய்...!
கொண்டாட்டத்தில்
உடம்பெல்லாம் சிவந்தபடி ஆடுகிறார்
காளி வேடமிட்டவர்
ஒப்பனைகளால் மூழ்கியவரை
கடவுளாகவே நினைத்து
காலில் விழுகிறார்கள்
அவரும் அழகாய் ஆசிர்வதிக்கிறார்
ஆட்டம் முடிந்ததும்
ஓய்வெடுக்கும் காளிக்கு உறுத்துகிறது
சுமக்கும் சூலாயுதமும் கிரீடமும்
பின்பக்கம் ஒட்டவைத்த கைகளும்
மிரட்டும் விழிகளோடும்
துருத்தும் நாக்கோடும்
நிற்கும் காளிகண்டு பயமற்று பக்கம்நின்று
புகைப்படம் எடுத்துக்கொண்ட சிறுவனிடம்
வேண்டுதல் வைக்கிறாள் காளி
அவன் கொண்டுவந்த தண்ணீரில்
தாகம் தீர்த்தபடி
ஒப்பனைகளைக் களையும் காளிக்கு தெரிந்திருக்கக்கூடும்
சிறுவன் ஒரு தெய்வமாய்...!
No comments:
Post a Comment