உயர்ந்து வளர்ந்த மரமொன்றின்
தனித்த கிளை நான்
சிறகு விரித்தபடி வந்தமர்ந்த
சிறு பறவை நீ
அலகு தவிர்த்து
கண்களால் கொத்துகிறாய்
கிளையெங்கும் கசிகிறது காதல்
பட்டுப்போன மரம்
துளிர்விடத் தொடங்குகிறது
உன் பார்வை பட்டுப்போன
நொடியிலிருந்து
இளைப்பாற வந்த பறவையின்
சிறகுக்குள் இளைப்பாறுகின்றன
மரமும் கிளைகளும்
ஒற்றை மரத்திற்கான ஈரம்
பாய்கிறது மொத்த வேர்களுக்குள்
இறுதியில் உந்திப் பறக்கிறாய்
காய்ந்து உதிர்ந்த இலையொன்று
உயிர்த்தெழுகிறது
தனித்த கிளை நான்
சிறகு விரித்தபடி வந்தமர்ந்த
சிறு பறவை நீ
அலகு தவிர்த்து
கண்களால் கொத்துகிறாய்
கிளையெங்கும் கசிகிறது காதல்
பட்டுப்போன மரம்
துளிர்விடத் தொடங்குகிறது
உன் பார்வை பட்டுப்போன
நொடியிலிருந்து
இளைப்பாற வந்த பறவையின்
சிறகுக்குள் இளைப்பாறுகின்றன
மரமும் கிளைகளும்
ஒற்றை மரத்திற்கான ஈரம்
பாய்கிறது மொத்த வேர்களுக்குள்
இறுதியில் உந்திப் பறக்கிறாய்
காய்ந்து உதிர்ந்த இலையொன்று
உயிர்த்தெழுகிறது
No comments:
Post a Comment