சில நேரங்களில் அன்பு கூட
ஐந்து பைசா, பத்து பைசா போல
செல்லாக்காசாகிவிடுகிறது ....
சின்ன சின்ன கோபங்கள் எல்லாம்
குட்டி போட்டு... குட்டி போட்டு
குடும்பமாய் வாழ ஆரம்பித்து விட்டால்
சமாதானம் கூட சங்கடத்தில் போய்
முடிகிறது....
இதயத்திற்கு நெருக்கமானவர்களின்
தற்காலிக நிராகரிப்பு தான்
நிரந்தர வலியைத்தருகிறது ....
அவை காயமில்லாமலே
தழும்புகளைத் தந்துவிடுகிறது ....
தொலைந்துபோன சந்தோசங்களைக்கூட
ஒரு நாள் தோண்டியெடுக்க முடியும்
நிராகரித்த நிமிடங்களை...????
===================================
No comments:
Post a Comment