கடந்துபோன நிமிடங்கள்
தொலைந்துபோன என் தூக்கங்களை தொகுத்து வைத்திருக்கிறேன் கவிதைகளாய்..! இந்த கடந்து போன நிமிடங்களில்...!
23 November 2017
என்னோடு
வர
மறுக்கிறது
கரையில்
படுத்திருக்கும்
உன்
பாதச்சுவடுகள்
.....!
உன் மடி தந்த சுகத்தை
இனி எந்த தலையணையாலும்
தந்து விட முடியாது....!
வண்ணங்களற்ற ஒரு வானவில்
உன் வெள்ளை துப்பட்டா....!
அடை மழையில் நனைந்து
அதிராத உடம்பு
உன் துப்பட்டா தீண்டலில்
தீப்பிடித்து எரிகிறது...!
நீ உறக்கத்தில் புரண்டுபடுக்கிறாய்
ஓரமாய் நின்று
ரசித்துக்கொண்டிருக்கிறது
நிலா .....!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)