23 November 2017

என்னோடு  வர மறுக்கிறது
கரையில் படுத்திருக்கும்
உன் பாதச்சுவடுகள்.....!



உன் மடி தந்த சுகத்தை 
இனி எந்த தலையணையாலும் 
தந்து விட முடியாது....!


வண்ணங்களற்ற ஒரு வானவில்
உன் வெள்ளை துப்பட்டா....!


அடை மழையில் நனைந்து
அதிராத உடம்பு
உன் துப்பட்டா தீண்டலில்
தீப்பிடித்து எரிகிறது...!



நீ உறக்கத்தில் புரண்டுபடுக்கிறாய்  
ஓரமாய் நின்று ரசித்துக்கொண்டிருக்கிறது 
நிலா .....!